Tuesday 17 December 2013

அதனினும் இனிது

1
கொலுசுச் சத்தத்தில்
முதுகுப் பக்கத்தில்

உள்ளங்கை ஈரத்தில்
உதடுகளின் ஓரத்தில் 

கன்னத்து மச்சத்தில்
கருவிழியின் ஆழத்தில் 

எங்கேனும் 
கிடைத்தேனா நான் .


2
பூப்பதற்கு
தயாராகி விட்டது
என் தோட்டம்.

இயற்பெயர்
இருக்கட்டும் .

பூக்களுக்கெல்லாம்
நீ வந்து
ஒரு புனைப் பெயர்
சூட்டிவிட்டுப் போ...

3
நீ
ஊரிலில்லாத நாளன்று
பெய்துகொண்டிருந்த மழையை
நீயென நினைத்தே
நனைந்தேன்.

1 comment:

  1. நனைந்ததால் நனைந்தோம் கவிதை மழையில்.மேலும் நனைய வேண்டுகிறோம்மழையில் நனையவே.

    ReplyDelete