Sunday 16 September 2012



nky;y ,Ul;Lk;
,t;Ntisapy;
cd; epidTfs;
xU
epyitg;Nghy;
NknyOe;J
Fspu;e;J xspu;fpd;wd.

epytpd; xsp
nky;yb itj;Jg;
glu;ifapy;

,Us;
eOtp tpyfp
epyTf;Fg;
ghijaikf;fpwJ

Fspu;e;j xsp
kionadg; nghope;J
vd;id
KOtJk;
eidj;jpUe;jJ.

mg;NghJ
G+kpnaq;Fk;
G+j;jpUe;jd
epyTfs;.

Thursday 23 August 2012

முதலில் பூத்த ரோஜா -கவிதைத் தொகுப்பிலிருந்து

  • கண்ணில்லாதவர்கள்
          
          கையேந்துகிறபோது
          
          நாமெல்லாம் குருடர்கள்.

  • வாசலில் நாய்கள் 
         
          வாலாட்டின

          உள்ளே குரைக்கும் சத்தம்.

  • ஆட்கள் வேலை செய்கிறார்கள்
         
           வேறு பாதையில் செல்
         
           சூரியனே.


Tuesday 13 March 2012

அகத்தின் புறம்

உன்
அடையாளங்கள்
கேட்டார்கள்

என்ன சொல்ல?

சுருட்டை முடியையா...
சுயநலத்தையா

உயரமாய் வளர்ந்ததையா
உடனிருந்து கெடுத்ததையா

செந்நிறம் என்பதையா..
செய்நன்றி மறந்ததையா

வசீகர சிரிப்பையா
வக்கிர புத்தியையா

எதைச் சொல்ல...?

அகத்தின் அசிங்கம்
முகத்தில் தெரியுமா...?

என் பண்டிகையின் நாட்குறிப்பிலிருந்து

என் பண்டிகையின் நாட்குறிப்பிலிருந்து

                    ஒவ்வொரு
                    பண்டிகையிலும்
                    அப்பா
                    குதுகலமாய் இருப்பார்.

                    தனித்தனி
                   கூடுகளிருப்பவர்கள்
                   தாய்க் கூட்டிற்கு
                   வருவதை எதிர்ப்பார்த்து
                   வாஞ்சையோடு
                   வாசலில் நிற்பார்.

                   ஒன்றாய் அமர்ந்து
                   உண்ணும் போது
                   உற்சாகமாயிருப்பர்.

                   பிள்ளைகள்
                   புத்தாடை அணிந்து
                   பவனி வருவதை
                   பெருமையோடு பார்ப்பார்.

                  குடும்ப மாநாட்டுத்
                  தலைமையேற்று
                 குழந்தையைப் போல்
                  துள்ளுவார்.

                  சாதாரண நகைச்சுவைக்கும்
                  சத்தம் போட்டு சிரிப்பார்.

                 பெரிய குறும்புகளைக் கூட
                 பொறுமையோடு ரசிப்பார்.

                 கார் வாங்கிய 
                 சேதி சொன்னால்
                 கர்வத்தோடு
                அம்மாவை பார்ப்பார்.

                 பாசத்தில் நனைத்த
                 வார்த்தைகளால்
                 பக்குவமாய் அறிவுரைப்பார்.

                 இந்த நாள்
                 நீளாதா என்று ஏங்குவார்.

                 அடுத்த பண்டிகை வரை
                 அந்த நாளைப் பற்றியே
                 அம்மாவிடம் பேசுவார்.

                 அப்பாவை நினைத்தபடி
                 வாசல்படியில்
                 அமர்ந்திருந்தேன் -
                 என்
                 பிள்ளைகள் வருகைக்காக.

Thursday 8 March 2012

சிந்தர்

1 . கறுப்பு ஆட்சிக்கு வரும்
     இன்று அந்தியிலும்
     நாளை ஆப்பிரிக்காவிலும் .

2 .கண்ணில்லாதவர்கள்
    கையேந்துகிறபோது
    நாமெல்லாம் குருடர்கள் .

3 நான்கு கால்களும்
   பல கைகளுமாய்
   அரசாங்க மேசைகள் .

4 .பட்டாம் பூச்சி பிடித்துக் கொடுத்தேன்
    இறக்கை முளைத்தது
    மகளுக்கு .

5 .துடைக்கத்   துடைக்க
    உன் நினைவுகள்
    ஒட்டடையாய் .

6.விழிகளில் ஊதி தூசி எடுத்தாய்
   தூசி வெளியேற
   உள்ளே நீ


              

Tuesday 6 March 2012

எனது கவிதைகள்-1

எனது " பொய்யெனப்  பெய்யும் மழை"  கவிதை நூலிலிருந்து .......

ஆதாமும் சாத்தானும் 


ஆதிக்கரு உருவானது ஆதாமிடம் எனில்
சாதிக்கரு உருவானது சாத்தானிடம் .

ஆதாமின் பிள்ளைகளுக்கு முத்தம் பிடிக்கும்
சாத்தானின் பிள்ளைகளோ ரத்தம் குடிக்கும் .

ஆதிமனிதன் நெருப்பைக் கண்டான்
சாதிமனிதன் ஏழையின் குடிசையை எரிய வைத்தான்

விண்ணைமுட்டும் கோபுரம் கண்டு கலைகள் வளர்த்தோம்
மண்ணை முட்டும் மருந்துகள் கண்டு அறிவியல் வளர்த்தோம்

அன்னை பாதத்தில் சொர்க்கம் கண்டு அன்பினை வளர்த்தோம்
ஆசானில் இன்னொரு தெய்வம் கண்டு கல்வியை வளர்த்தோம்

வளர்த்ததை எல்லாம் அழிப்பது எப்படியென
ஆராய்ச்சி செய்து சாதியைக் கண்டோம்

சாதிக்கும் தலைவர்கள் இல்லாத தேசத்தில்
சாதிக்குத் தலைவர்கள் ஏராளம் .


பொய்யெனப் பெய்யும் மழை 


பேயாய் பெய்யும் மழை
அடித்துப் பெய்யும் மழை
விட்டுவிட்டுப் பெய்யும் மழை
நசநசவென பெய்யும் மழை
தூறிவிட்டு செல்லும் மழை
எந்தமழையானாலும்
வந்தாலும் சிரமம்
வராவிட்டாலும் சிரமம் -
ஊருக்குப் போன
மனைவியைப் போல .


ஒவ்வொரு முறையும் 


துயரங்களால் துரோகங்களால்
இழப்புகளால் இம்சைகளால்
உடைந்து போய்விடுகிறோம்
ஒவ்வொருவரும்

நம்பிக்கைகளால் ஒட்டிக்கொள்கிறோம்
ஒவ்வொருமுறையும் .

ஆடைகள் என்பதெல்லாம்
தழும்புகளை மறைக்கத்தான் .