Thursday 26 December 2013

நிறங்கள்

நேற்றென் கனவுகள் 
கறுப்பு வெள்ளையில்
இருந்தன.

வானத்தில் 
நீலமில்லை.

மரங்களில்
பச்சையில்லை.

கடல் வெள்ளையாய்
பால் கறுப்பாய்
இருந்தன.

ரத்தத்தில் 
அதன் நிறமில்லை.

வானவில்லில்
ஏழு கோடுகள் மட்டுமே
இருந்தன.

கனவுகளிலும்
களவாடப்பட்டிருந்தன
வண்ணங்கள்.

நிறமற்றிருக்கிறது
வாழ்க்கை.



1 comment:

  1. மனமற்ற வாழ்வில் நிறங்களுக்கு நிறமில்லையோ

    ReplyDelete